மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு..!!
Read Time:50 Second
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி களுத்துறை, இரத்தினபுரி, மாத்தறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடுப்பிலி குறிப்பிட்டுள்ளார்.
எனவே குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானமாக இருக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Average Rating