யாழில் தேவாலயம் ஒன்றில் கண்ணீர் சிந்தும் மாதா சிலை..!!
Read Time:1 Minute, 2 Second
குருநகர் டேவிட் வீதிக்கு அருகே காணப்படும் பற்றிமாதா சிற்றாலய மாதா சிலையின் கண்ணில் இருந்து தற்பொழுது கண்ணீர் சிந்திய வண்ணம் உள்ளது.
குறித்த தேவாலயத்தின் பற்றி மாதா உருவச் சிலையின் கண்ணில் இருந்து இன்று மதியம் 12.30 மணி தொட க்கம் கண்ணீர் சிந்திய வண்ணம் உள்ளதாக அப் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஆலயத்தின் செபமாலை பிரார்த்தனை வழிபாடுகள் கடந்த வாரத்தில் இருந்து பற்றிமாதா ஆலயத்தில் நடைபெற்று வரும் நிலையில்
இவ்வாறான அதிசய சம்பவம் நடைபெற்றுள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு காலப் பகுதியிலும் குறித்த தேவாலயத்தில் மாதா கண்ணீர் சிந்தியமை குறிப்பிடத்தக்கது.
Average Rating