19 எண்ணெய் கிணறுகளுக்கு தீ வைத்த தீவிரவாதிகள்..!!
Read Time:1 Minute, 23 Second
ஈராக்கில் மொசூல் நகரம் மட்டுமே தற்போது ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் உள்ளது. அவர்களை விரட்டியடிக்க ஈராக் ராணுவம் அந்த நகருக்குள் புகுந்துள்ளது.
இதை தாக்குப்பிடிக்க முடியாமல் அங்கிருந்த தீவிரவாதிகள் பலர் வெளியேறி வருகிறார்கள்.
அப்படி வெளியேறி சென்ற தீவிரவாதிகள் செல்லும் வழியில் இருந்த 19 எண்ணெய் கிணறுகளுக்கு தீ வைத்தனர். இதனால் இந்த கிணறுகள் தொடர்ந்து எரிந்தபடி உள்ளன. இதனால் எங்கு பார்த்தாலும் புகை மூட்டமாக உள்ளது. சுற்றுச்சூழலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அந்த பகுதியில் ராணுவத்தினர் யாரும் செல்ல முடியாத நிலை இருக்கிறது. எனவே தீயை அணைக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இதனால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த பகுதியில் இன்னும் 6 கிணறுகள் உள்ளன. அவற்றுக்கும் தீவிரவாதிகள் தீ வைக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Average Rating