தனியாக இருந்த இளம்பெண்ணை கற்பழிக்க முயன்ற வாலிபர்..!!
Read Time:1 Minute, 9 Second
தேனி அருகில் உள்ள கருவேலநாயக்கன்பட்டி வள்ளுவர் காலனியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். லோடுமேனாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பிரியா (வயது 22). அதே பகுதியைச் சேர்ந்த ஜெயக்கொடி மகன் ரவி (32). இவர் அடிக்கடி பிரியாவிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.
சம்பவத்தன்று வீட்டில் தனியாக பிரியா இருந்ததை அறிந்து ரவி கதவை தட்டினார். அவர் கதவை திறந்தவுடன் பிரியாவின் கையை பிடித்து தன் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தினார்.
உடனே பிரியா கூச்சலிடவே இது குறித்து வெளியே கூறுனால் கொலை செய்து விடவதாக மிரட்டி விட்டு தப்பி ஓடி விட்டார்.
இது குறித்து தேனி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து ரவியை தேடி வருகின்றனர்.
Average Rating