படப்பிடிப்பின்போது நடிகர்கள் இருவர் நீரில் மூழ்கி மாயம்..!!
கன்னட நடிகர் துனியா விஜய் தற்போது ‘மஸ்தி குடி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி திப்பகொண்டனஹள்ளி அருகே படமாக்கப்பட்டு வருகிறது. அப்போது ஹெலிகாப்டரில் இருந்து தண்ணீருக்குள் குதிப்பதுபோல் ஒரு காட்சியை படக்குழுவினர் படமாக்கினர்.
இந்த காட்சியில் நாயகன் துனியா விஜய்யுடன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும உதய் மற்றும் அணிலை அடித்து 100 அடி உயரத்தில் பறக்கும் ஹெலிகாப்டரில் இருந்து ஏரிக்குள் குதிப்பதுபோல் படமாக்கியுள்ளனர். அப்போது, ஹெலிகாப்டரில் இருந்து மூன்று பேரும் ஏரிக்குள் குதித்துள்ளனர்.
இதில், ஹீரோ துனியா விஜய் மட்டும் கரைக்கு திரும்பி வந்துள்ள நிலையில், உதய் மற்றும் அணில் ஆகியோர் கரை திரும்பவில்லை. அவர்கள் நீரில் மூழ்கிவிட்டார்களா? அல்லது நீரில் அடித்துச் செல்லப்பட்டார்களா? என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. அவர்களை தேடும் பணியை தற்போது உள்ளூர் போலீசாரும், மீட்பு படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
இதுபோன்ற ஆபத்தான காட்சிகளை படமாக்கும்போது படக்குழுவினர் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றவில்லை என்பதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
Average Rating