கலிபோர்னியாவில் வாக்குப் பதிவு மையம் அருகே துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி..!!
Read Time:1 Minute, 21 Second
அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப் பதிவு நேற்று முடிவடைந்த நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கலிபோர்னியா மாகாணத்தின் அசுசா வாக்குப் பதிவு மையம் அருகே துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். பலர் காயம் அடைந்துள்ளனர்.
முன்னதாக அதிகாரிகள் மர்ம நபர் ஒருவர் ஆயுதங்களுடன் வாக்குப் பதிவு மையத்திற்கு வருவதை கண்டறிந்தனர். அப்போது அந்த மர்ம நபர் போலீசார் மீது 20 முறை சுட்டுள்ளான்.
பயங்கர ஆயுதங்களுடன் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபருடன் போலீசார் பதில் தாக்குதல் நடத்தியதாக லாஸ் ஏஞ்செல்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் போலீஸ் அதிகாரிகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
Average Rating