காதலிக்க மறுத்த இளம்பெண் மீது ஆசிட் வீச்சு..!!

Read Time:2 Minute, 34 Second

ss-26-640x381ஒரு தலைக்காதல் கிறுக்கன்களால் இளம்பெண்கள் பாதிக்கப்படத்தான் செய்கிறார்கள். காதலிக்க மறுக்கும் பெண்களுக்கு தண்டனை அளிப்பதாக அவர்களை வதைப்பது நடக்கத்தான் செய்கிறது.

நெல்லையில் காதலிக்க மறுத்த இளம்பெண் மீது ஆசிட் வீசி விட்டு தப்பி ஓடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே களக்காட்டில் வசிப்பவர் ராமலட்சுமி(25). அங்குள்ள செல்போன் கடையில் வேலை செய்து வருகிறார். அவரை சின்னராசு என்பவர் விரட்டி விரட்டி காதலித்துள்ளார்.

ஆனால் ராமலட்சுமி அதை ஏற்கவில்லை , மறுத்து ஒதுங்கி சென்றுள்ளார். ஆனால் சின்னராசு விடாமல் ராமலட்சுமியை பின் தொடர்ந்து மிரட்டி உள்ளார். இந்நிலையில் இன்று நெல்லை வள்ளியூர் சிக்கி குளம் அருகே திடீரென ராமலட்சுமியை வழி மறித்து தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து வீசிவிட்டு ஓடிவிட்டார்.

ஆசிட் வீச்சில் படுகாயமாடைந்த ராமலட்சுமி அலறி துடித்தார் . உடனடியாக அருகில் உள்ளவர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ராமலட்சுமி மீது ஆசிட் வீசிவிட்டு தப்பி ஓடிய சின்னராசுவை போலீசார் தேடி வருகின்றனர்.

ஏற்கனவே ஒரு தலைக்காதல் விவகாரத்தில் சுவாதி , சேலம் விணுப்பிரியா , கரூர் கல்லூரி மாணவி மற்றும் விநோதினி ஆகியோர் பலியாகி உள்ளனர். இதில் சுவாதி விவகாரம் பெரிதாக வெடித்தது. ஆனால் இன்னும் சுவாதி கொலைக்கான காரணம் தெரியவில்லை.

ஆனால் மற்ற மூவரும் காதலர்கள் காரணமாகவே கொலை செய்யப்பட்டனர். காரைக்கால் இளம்பெண் வினோதினி ஆசிட் வீசி கொலை செய்யப்பட்டார். பின்னர் அவரது தாயார் தற்கொலை செய்து கொண்டார், தந்தை மறைந்தார் , அவரது குடும்பமே சிதைந்து போனது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முதலில் செக்ஸ் வெறும் உடல் சம்பந்தப்பட்டது என்பதே தவறான நம்பிக்கை..!!
Next post அமெரிக்க தேர்தல், வெற்றியின் விளிம்பில் டிரம்ப் : முக்கிய மாநிலங்கள் அவர் வசம்..!! (வீடியோ)