திடீரெனத் தோன்றிய பாரிய பள்ளத்தால் போக்குவரத்து தடை : அதிர்ச்சியில் மூழ்கியுள்ள பொதுமக்கள்…!!
Read Time:1 Minute, 4 Second
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள நெடுஞ்சாலையின் குறுக்குச் சந்திப்பில் திடீரென மிகப்பெரிய பள்ளம் தோன்றியுள்ளது.
இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பள்ளம் சுமார் 30 மீட்டர் நீளமும் 27 மீட்டர் அகலமும் 15 மீட்டர் ஆழமும் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
நெடுஞ்சாலையின் நடுவே திடீரென ஏற்பட்ட இந்த பள்ளம், அந்த வழியாக வாகனங்கள் ஓட்டிச் சென்றவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நான்கு வழிச்சாலையின் குறுக்கே ஏற்பட்ட இந்த பள்ளத்தில் அதிர்ஷ்டவசமாக எவரும் வீழ்ந்து பத்திற்குள்ளாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating