கோர்ட்டு வளாகத்தில் நீதிபதி தூக்குப்போட்டு தற்கொலை..!!

Read Time:1 Minute, 36 Second

201611100418529303_court-complex-judge-herself-to-death_secvpfகேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தின் மாவட்ட கோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வந்தவர் வி.கே. உன்னிகிருஷ்ணன். குற்றவழக்கு ஒன்றில் இவர் மீது கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் சமீபத்தில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஜாமீனில் வெளிவந்த அவர் கர்நாடக மாநிலத்துக்கு தப்பி ஓடினார். அங்கு அவர் குடிபோதையில் ஆட்டோ டிரைவர்கள் மற்றும் போலீசாருடன் கைகலப்பில் ஈடுபட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக கடந்த 6-ந்தேதி கர்நாடக போலீசார் அவரை கைது செய்தனர். அதன் பின்னர் அவர் கேரளா அழைத்துவரப்பட்டார்.

இந்த விவகாரத்தில் நேற்று முன்தினம் கேரள ஐகோர்ட்டு உன்னிகிருஷ்ணனை நீதிபதி பதவியில் இருந்து பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.

இதில் மனமுடைந்த உன்னிகிருஷ்ணன் நேற்று காசர்கோடு மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் உள்ள தனது அலுவலக அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்து, வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொண்டாட்டி சொன்னா கேளுங்க! – இத நான் சொல்ல‍ல, உளவியலாளர்கள் சொல்றாங்க..!!
Next post இறந்த பூனையை ஹெலியாக மாற்றிய நபர்..!! (வீடியோ)