வவுனியாவில் குடும்பபெண் மரணம் – பொலிசார் விசாரணை…!!
எரியூட்டப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பெண் மரணமடைந்த விவகாரம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக வவுனியாப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு எரிகாயங்களுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இம் மரணம் தொடர்பாக தெரியவருவதாவது, வவுனியா தெற்கிலுப்பைக்குளம் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் லில்லி(37) என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார் என ஆரம்ப கட்ட விசாரணையின் மூலமாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிஷோரை தொடர்பு கொண்ட பொழுது, எரிகாயங்களினாலேயே மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவித்தார்.
எனினும் இம்மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இறந்த பெண்ணின் மகன் தெரிவித்ததையடுத்து மேலதிக விசாரணைகளை பொலிஸாரை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதனையடுத்து வவுனியா வர்த்தகர் ஒருவர் மீது சந்தேகம் கொண்டுள்ளதாக இறந்த பெண்ணின் மகன் தெரிவித்ததையடுத்து வவுனியா பொலிஸார் வர்த்தகரை விசாரணைக்குள்ளாக்கி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Average Rating