ஓச்சேரியில் நிர்வாணமாக்கி பெண் கொடூரக் கொலை…!!
வேலூர் மாவட்டம் ஓச்சேரி அருகே சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சித்தஞ்சி பகுதியை சேர்ந்தவர் கன்னியம்மாள் (வயது 60). இவரது கணவர், ஏகாம்பரம் இறந்து விட்டார். கன்னியம்மாளுக்கு சாந்தி (40) என்ற மகள் உள்ளார்.
அவர், திருமணமாகி கணவர் மற்றும் 2 மகன்களுடன் வாலாஜாவில் வசிக்கிறார். ஆதரவின்றி தவித்த கன்னியம்மாள், வீட்டில் சிறிய பெட்டிக்கடை வைத்து பிழைப்பு நடத்தி வந்தார். நேற்றிரவு வழக்கம் போல் கன்னியம்மாள் வீட்டில் இருந்தார்.
இன்று காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்பட வில்லை. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், கன்னியம்மாளின் வீட்டு கதவை திறந்தனர். கதவு பூட்டப்படாமல் இருந்தது. அப்போது, கன்னியம்மாள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
அவரது ஆடைகள் முழுவதுமாக கலையப்பட்டு நிர்வாணமாக கிடந்தார். மர்ம உறுப்பு கத்தியால் குத்தப்பட்டு சேதப்பட்டிருந்தது. கழுத்தும் அறுக்கப்பட்டு கொடூரமான முறையில் கன்னியம்மாள் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள், உடனடியாக சித்தஞ்சி கிராம நிர்வாக அலுவலர் நவீனுக்கு தகவல் கொடுத்தனர். கிராம நிர்வாக அலுவலர், சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு அவலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
இன்ஸ்பெக்டர் சந்திர சேகரன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்றனர். கன்னியம்மாளின் உடலை பார்வையிட்டு, மோப்ப நாய் உதவியுடன் கொலையாளி குறித்த அடையாளங்களை சேகரித்தனர்.
மோப்ப நாய் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை ஓடிச் சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. போலீஸ் உயர் அதிகாரிகளும் நேரில் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து, கன்னியம்மாளின் பிணத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
தனியாக வசித்து வந்த கன்னியம்மாள் கொடூரமாக கொலை செய்யப்படுவதற்கு காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கன்னியம்மாள் தனியாக இருப்பதையறிந்து, அவரை கற்பழித்து மர்ம நபர்கள் கொலை செய்தனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
Average Rating