ஆற்றில் மிதந்த இளம்பெண்ணின் சடலம்: தொடரும் பாலியல் படுகொலைகள்…!!

Read Time:3 Minute, 10 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90ஜேர்மனியின் Freiburg பகுதியில் இளம்பெண்ணின் சடலம் ஆற்றில் மிதந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஜேர்மனியின் Freiburg பகுதியில் கடந்த வாரம் 19 வயதேயான இளம்பெண் ஒருவரின் சடலம் மிதந்ததை அடுத்து அதை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு இளம்பெண்ணின் உடல் ஆற்றில் மிதப்பதாக தகவல் வெளியானதை அடுத்து சம்பவயிடத்தை Freiburg பொலிசார் முற்றுகையிட்டுள்ளனர்.

குறித்த இளம்பெண் 27 வயதான கரோலின் கிரபர் என்பது விசாரணை அதிகாரிகளின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மட்டுமின்றி உடலில் இருக்கும் காயங்கள் அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய பின்னர் கொலை செய்திருக்கலாம் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஞாயிறன்று காலை இளம்பெண் கிரபர் ஜாக்கிங் சென்றதாகவும், ஒரு மணி நேரத்தில் வீடு வந்து சேர்வதாக சொன்ன அவர் பல மணி நேரம் கடந்தும் திரும்பவில்லை என்று உறவினர்கள் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.

சில நாட்கள் முன்னதாக 19 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் இதேபோன்று கொலை செய்யப்பட்ட நிலையில் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டார். விருந்து ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் தந்து இருச்சக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பும் வழியில் மர்ம நபர்களால் தாக்குண்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

குறித்த இளம்பெண்ணும் பாலியல் துன்புறுத்தலுக்கு பின்னர் கொலை செய்யப்பட்டுள்ளது மருத்துவபரிசோதனையில் தெரிய வந்தது.

கற்பளித்து கொலை செய்யப்பட்டு கொலையாளிகளால் ஆற்றில் வீசப்பட்டாரா அல்லது கொலைகாரர்களிடம் இருந்து தப்ப ஆற்றில் குதித்தாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை.

குறித்த இரண்டு பாலியல் படுகொலைகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவையா அல்லது வேறு ஏதும் காரணம் இதன் மறைவில் உள்ளதா என்று விசாரணை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மட்டுமின்றி, இச்சம்பவங்கள் குறித்து மேலதிக தகவல்கள் தெரிய வரும் பொதுமக்கள் பொலிசாருக்கு உதவ முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வேலியே பயிரை மேய்ந்தது…! ஏழு வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை…!!
Next post அச்சம் என்பது மடமையடா…!!