பாகுபலி பட அதிபர் அலுவலகங்களில் வருமான வரி சோதனை…!!
Read Time:1 Minute, 4 Second
பிரபாஸ், அனுஷ்கா நடிப்பில், எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ‘பாகுபலி’ படம் வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் 4 ஆயிரம் தியேட்டர்களில் வெளியான இப்படம் ரூ.500 கோடி வசூலை ஈட்டியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த படத்தின் தயாரிப்பாளர்களான ஷோபு யார்லகட்டா, பிரசாத் தேவினேனி ஆகியோருக்கு சொந்தமான அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். ஐதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸ், ஜூபிளி ஹில்ஸ் ஆகிய பகுதிகளில் இந்த சோதனை நடந்தது. ‘இது அவ்வப்போது பின்பற்றப்படும் வழக்கமான நடைமுறைதான்’ என்று வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
Average Rating