தன்னை பின் தொடர்ந்தவருக்கு இந்தி நடிகை கொடுத்த விசித்திர தண்டனை…!!
நடிகைகளை ரசிகர்கள் ஆர்வமாக பார்த்து மகிழ்வதும், பின் தொடர்வதும் புதிது அல்ல. சில நடிகைகள் இதை பெரிதாக எடுத்துக் கொள்வது இல்லை. சிலர் சுதந்திரமாக நடமாட முடியவில்லையே என்று நொந்து கொள்வது உண்டு.
இதில், இந்தி நடிகை ஷ்ரத்தா கபூர் புதுவிதம். இவரை வாலிபர் ஒருவர் தொடர்ந்து சென்றுள்ளார். இந்த நடிகை எங்கு சென்றாலும் ஒரே நாளில் 17 முறை அந்த வாலிபர் இவர் பின்னால் தொடர்ந்து இருக்கிறார். அவர் தன்னை பின் தொடராமல் இருக்க என்ன வழி என்று யோசித்தார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள ஷ்ரத்தா சென்றார். அங்கேயும் அந்த வாலிபர் வந்து நின்றார். உடனே அவரை மேடைக்கு வரும்படி அழைத்தார். அங்கு சென்ற வாலிபரை, “இவர் ஒரே நாளில் என்னை 17 தடவை பின் தொடர்ந்தார்” என்று கூறி ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
அத்துடன் விடவில்லை. யாரும் எதிர்பாராத நிலையில் திடீர் என்று அந்த வாலிபரை கட்டிப் பிடித்தார். இதனால் அவர் எதுவும் சொல்ல முடியாமல் வெடவெடத்துப் போனார். இந்த சம்பவம் இந்தி ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating