கோவையில் காதல் கணவரை உயிரோடு தீ வைத்து எரித்த இளம்பெண்…!!

Read Time:3 Minute, 42 Second

201611121719406695_wife-fire-burning-alive-his-husband-near-coimbatore_secvpfகோவை பீளமேடு விளாங்குறிச்சி ரோடு பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(வயது 30). ஓட்டல் தொழிலாளி.

இவரது மனைவி சுமதி(28). இவர்கள் காதலித்து கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு யுவராஜ்(8) என்ற மகனும், யுவஸ்ரீ(7) என்ற மகளும் உள்ளனர்.

சுமதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியில் உள்ள வணிகவளாகத்துக்கு வேலைக்கு சென்றார். இது ராமச்சந்திரனுக்கு பிடிக்க வில்லை. இதுதொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

சுமதியின் நடத்தையில் சந்தேகப்பட்டு ராமச்சந்திரன் அடிக்கடி தகராறு செய்தார். அதே நேரம் கணவர் ஒரு பெண்ணுடன் மோட்டார் சைக்கிளில் செல்வதை சுமதி பார்த்ததாகவும், இதுதொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இருவரும் கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். ராமச்சந்திரன் மட்டும் அதேபகுதியில் தனியாக வசித்து வந்தார்.

அவர் சமீபத்தில் சுமதியிடம் விவாகரத்து கேட்டு நோட்டீசு அனுப்பி உள்ளார்.

இதனால் சுமதி அதிர்ச்சியடைந்தார். காதல் கணவர் தன்னை பிரிந்து விடுவார் என மனம் வருந்திய அவர் கணவரிடம் உண்மை நிலையை விளக்கி உள்ளார்.

ஆனால் அதை ராமச்சந்திரன் அதை ஏற்றுக்கொள்ளாமல் விவாகரத்து கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவர் மீது சுமதி ஆத்திரம் அடைந்தார். இன்று அதிகாலை 2.30 மணி அளவில் ராமச்சந்திரன் வசிக்கும் வீட்டுக்கு சென்ற சுமதி அங்கு கணவர் கண் அயர்ந்து தூங்கிக் கொண்டிருப்பதை கண்டார். உடனே அவர் தான் கொண்டு வந்திருந்த மண்எண்ணையை எடுத்து கணவர் மீது ஊற்றி தீ வைத்தார். இதனால் உடல் கருகிய அவர் அலறித்துடித்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். அதற்குள் சுமதி அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

உடனே அப்பகுதி மக்கள் ராமச்சந்திரன் உடலில் பற்றிய தீயை அணைத்து அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, சுமதி ராமநாதபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை பீளமேடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

காதலித்து திருமணம் செய்த கணவர் விவாகரத்து நோட்டீசு அனுப்பியதால் ஆத்திரமடைந்து அவர் மீது தீ வைத்ததாக சுமதி கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாம்பத்திய உறவின்போது இந்த உணர்வு அதிகமாக ஏற்படுகிறதா? தீர்வு என்ன?
Next post திருமணம் செய்வதாக கூறி பட்டதாரி பெண்ணிடம் உல்லாசம்: வாலிபர் கைது…!!