திருகோணமலையில் தாய்ப்பால் புரையேறி குழந்தை உயிரிழப்பு…!!
Read Time:1 Minute, 28 Second
திருகோணமலை கோமரங்கடவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தாய்ப்பால் புரையேறி, பிறந்து 50 நாட்களேயான சிசுவொன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவமானது இன்று(12) காலை இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
தூக்கத்தில் அழுது கொண்டிருந்த சிசுவிற்கு தாய் பால் கொடுத்துள்ளார். இதன்போது, பால் புரை ஏறியதால் விரைவாக கோமரங்கடவெல வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இருந்தும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சிசு உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
குறித்த சிசுவின் சடலமானது கோமரங்கடவெல பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சிசுவின் தாய், சிசு குறை மாதத்தில் பிறந்ததாகவும், நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தனது வாக்கு மூலத்தில் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Average Rating