இவள் தான் என் காதலி! நாகப்பாம்புடன் வசித்து வரும் நபர்- இது தெய்வீக பாம்பு காதல்…!!

Read Time:1 Minute, 58 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-2சிங்கப்பூரில் தனது காதலி இறந்த பின் அவளை நினைத்து வெள்ளை நிற நாகப் பாம்புடன் காதலன் வசித்து வருவது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சிங்கப்பூரைச் சேர்ந்த வோரணன் சரசலின் என்பவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் காதலி இறந்து விடவே மிகுந்த மன வேதனையுடன் இருந்த சரசலினுக்கு ஒரு வெள்ளை நிறபாம்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில், அந்த பாம்பினை தனது காதலியாக நினைத்து அதனுடன் வாழ்ந்து வருகிறார்.

அந்த பாம்பினை எங்கு சென்றாலும் அழைத்துச் செல்கிறார். டிவி பார்க்கும் பொழுது கூட அதனுடன் உட்கார்ந்து தான் டிவி பார்க்கிறார்.

இது குறித்து அவர் கூறியதாவது, நான் என் காதலி இறந்த மன வேதனையில் இருந்த பொழுது இந்த பாம்பு தான் எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது.

முதலில் இந்த பாம்பை ஒரு உணவகத்திற்கு சென்றிருந்த போது தான் பார்த்தேன். இதைப் பார்த்து அனைவரும் பயந்து ஓடி விட்டனர்.

ஆனால் எனக்கு பயம் வரவில்லை, மாறாய் அதனை கையில் பிடித்து உடன் அழைத்துச் சென்று விட்டேன்.

இந்தப் பாம்பு தனக்கு கிடைத்தது ”உண்மையான காதல் தோற்றுப் போவதில்லை, எனது காதலி தான் மறுபிறவி எடுத்து வெள்ளை நாகப்பாம்பாக மறுபிறவி எடுத்துள்ளார்” என்கிறாராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விஜய் சேதுபதி ஜோடி திரிஷா…!!
Next post நாயிடம் சிக்கிய மகனை காப்பாற்ற போராடிய தாய்: நெஞ்சை உருக்கும் வீடியோ…!!