கிட்னி மோசடி: இலங்கை போலீஸ் காவலில் ஐந்து இந்தியர்கள்…!!
Read Time:1 Minute, 18 Second
கடந்த மார்ச் மாதம் 4-ந்தேதி விசா விதிமுறையை மீறியதாக 8 இந்தியர்களை இலங்கை அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் கொழும்பு மருத்துவமனையில் முறைகேடாக கிட்னி மாற்றும் மோசடியில் அவர்களுக்கு தொடர்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்கள் அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மிரிஹானாவில் உள்ள தடுப்பு மையத்தில் தங்கவைக்கப்பட்டனர். அதில் ஒருவர் அங்கிருந்து தப்பியோடி இந்தியாவிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. மற்றவர்கள் அனைவரும் கடந்த வாரம் தடுப்பு மையத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளனர்.
அவர்களில் ஐந்து பேரை பெசாலை போலீசார் தலைமன்னாரில் நேற்று பிடித்துள்ளனர். பின்னர் அவர்களை மன்னார் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தினார்கள். அவர்களை வருகிற 24-ந்தேதி வரை போலீஸ் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
Average Rating