மூன்று உயிர்கள் பறிபோன சோகம் : இதுதான் காரணமா?

Read Time:1 Minute, 48 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-2தெஹிவளை – ஓபன் பிரதேசத்தில் மண்ணெண்ணையை உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்து தற்கொலை செய்ய முற்பட்ட நபரொருவர் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இம்புலான – ருவன்வெல்ல பிரதேசத்தை சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த நபர் தகாத உறவு காரணமாக மன உளைச்சலுக்கு உள்ளாகி இவ்வாறு தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதேவேளை, வில்கமுவ – யாய – பத்கம்பல பிரதேசத்தில் நேற்று இரவு கூரிய ஆயுதத்தால் தாக்கி தாய் மற்றும் மகளை கொலை செய்து கணவரை காயங்களுக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ள தாயின் வயது 55 எனவும் மகளின் வயது 21 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கொலைகளை செய்துள்ளவர் உயிரிழந்துள்ள மகளுடன் தகாத உறவு வைத்துள்ள ஒருவன் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 25 வயதான வில்கமுவ – ஹந்துன்கம பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் இன்று நாவுல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காலை 6 மணிக்கு இதனை குடித்தால்…..உடம்பில் என்ன மாற்றம் நிகழும்?
Next post தமிழ் மக்கள்; எரியும் சட்டிக்குள்ளிருந்து, நெருப்பிற்குள் வீழ்ந்தார்கள்.: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-20)