மூன்று உயிர்கள் பறிபோன சோகம் : இதுதான் காரணமா?
தெஹிவளை – ஓபன் பிரதேசத்தில் மண்ணெண்ணையை உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்து தற்கொலை செய்ய முற்பட்ட நபரொருவர் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இம்புலான – ருவன்வெல்ல பிரதேசத்தை சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த நபர் தகாத உறவு காரணமாக மன உளைச்சலுக்கு உள்ளாகி இவ்வாறு தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இதேவேளை, வில்கமுவ – யாய – பத்கம்பல பிரதேசத்தில் நேற்று இரவு கூரிய ஆயுதத்தால் தாக்கி தாய் மற்றும் மகளை கொலை செய்து கணவரை காயங்களுக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ள தாயின் வயது 55 எனவும் மகளின் வயது 21 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கொலைகளை செய்துள்ளவர் உயிரிழந்துள்ள மகளுடன் தகாத உறவு வைத்துள்ள ஒருவன் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 25 வயதான வில்கமுவ – ஹந்துன்கம பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் இன்று நாவுல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating