திருமண விழாவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி: இந்து மகாசபா தலைவர் சத்வி அட்டூழியம் – வீடியோ..!!
Read Time:1 Minute, 10 Second
இந்து மகாசபா என்ற அமைப்பின் தலைவர் சத்வி தேவா தாக்கூர். இவர் பல்வேறு சர்ச்சைக்குரிய சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றது.
இந்நிலையில் அரியானா மாநிலத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் சத்வி தேவா மற்றும் அவரது பாதுகாவலர்கள் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
சம்பவத்தை நேரில் பார்த்தவர் கூறுகையில், ”சாத்வியின் பாதுகாவலர்கள் விழாவில் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அவர்கள் முன்பு இருப்பவர்கள் பற்றி கவலைப்படவில்லை. முதலமைச்சர் மனோகர் லால் கட்டரின் கர்னல் நகரில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அப்படியென்றால் மாநிலத்தின் மற்ற இடங்களில் நிலைமை எப்படி இருக்கும்” என்று தெரிவித்தார்.
Average Rating