அமெரிக்காவின் ஓக்லஹோமா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி…!!
Read Time:1 Minute, 9 Second
அமெரிக்காவின் ஓக்லஹோமா மாகாணத்தில் உள்ள வில் ரோஜர் விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் விமான நிலையத்தில் பதற்றம் ஏற்பட்டது. துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபரை தேடும் பணியில் போலீசார் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.
உத்தரவு வரும் வரை விமான நிலையத்தில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு விமான நிலைய அதிகாரி தனது டுவிட்டரில் குறிப்பிட்டு இருந்தார்.
இதனையடுத்து வில் ரோஜர் விமான நிலையத்திற்கு வரும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டது. மேலும் விமான நிலையமும் தற்காலிகமாக மூடப்பட்டது.
Average Rating