வியாசர்பாடியில் ரவுடி வெட்டிக் கொலை…!!

Read Time:3 Minute, 12 Second

201611161627519247_vyasarpadi-near-rowdy-murder-police-inquiry_secvpfவியாசர்பாடி சஞ்சய் நகர் 1-வது தெருவில் வசித்தவர் அப்பு என்கிற மணிகண்டன். ரவுடி. இவரது மனைவி இந்துமதி. 10 மாத பெண் குழந்தை உள்ளது.

மணிகண்டனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த செபஸ்டினுக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று காலை சஞ்சய் நகர் 3-வது தெருவில் மணிகண்டன் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த செபஸ்டின் அவரை அரிவாளால் சரமாரியாக ஓட ஓட விரட்டி வெட்டினர். அப்போது உடன் செபஸ்டின் சகோதரர் சவுந்தரும், அவரது நண்பரும் இருந்தனர். 3 பேரும் சேர்ந்து மணிகண்டனை வெட்டியதாக தெரிகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். உடனே 3 பேரும் தப்பி ஓடி விட்டனர்.

கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டது. போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் செபஸ்டின், சவுந்தர் ஆகியோர் வியாசர்பாடி ஜீவா ரெயில் நிலையம் அருகில் பதுங்கி இருப்பதாகவும், அங்கிருந்து ரெயிலில் தப்பி செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனே இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் மாறு வேடத்தில் சென்று செபஸ்டின், சவுந்தரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

போலீசில் செபஸ்டின் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

கடந்த 2 ஆண்டுக்கு முன்பு ஒரு தகராறை எனது தந்தை தேவராஜ் சமாதானம் செய்த போது அவரை மணிகண்டன் வெட்டினான். 6 மாதத்துக்கு முன்பு அதன் பின் எனது அண்ணன் பால்ராஜை வெட்டினான். இதனால் எங்களுக்குள் முன் விரோதம் இருந்தது.

கடந்த 13-ந்தேதி மாலை பெரம்பூரில் நடந்த ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு நான் சென்றபோது மணிகண்டன் உள்பட 6 பேர் கும்பல் என்னை தாக்கி கொலை செய்ய முயன்றனர். அவர்களை தள்ளி விட்டு தப்பி ஓடி வந்து விட்டேன். என்னை கொலை செய்ய முயன்ற மணிகண்டனை கொலை செய்ய திட்டமிட்டேன்.

நேற்று காலை மணிகண்டனை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொன்றேன். அப்போது சகோதரர் சவுந்தர் உடன் இருந்தார். அவர் மணிகண்டனை வெட்டவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

கைது செய்யப்பட்ட செபஸ்டின், சவுந்தரை போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய மற்றொருவரை தேடி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காபூலில் தற்கொலைப்படை தாக்குதலுக்கு 6 பேர் பலி…!!
Next post புதுவை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கார் விபத்தில் பலி…!!