தனியார் பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி 3 வயது சிறுமி பலி…!!

Read Time:1 Minute, 31 Second

201611171218543475_3-year-old-child-dead-in-private-school-van-accident_secvpfசிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள மூங்கில்ஊரணி பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து, அரசு மருத்துவமனை ஊழியர். இவருக்கு வசந்த பிரியன் என்ற மகனும், பிரவீணா (3) என்ற மகளும் உள்ளனர்.

தனியார் பள்ளியில் படிக்கும் வசந்தபிரியன், தினமும் பள்ளி வேனில் சென்று வந்தான். இன்று (வியாழக்கிழமை) காலை வழக்கம்போல் அவன் பள்ளிக்கு புறப்பட்டான்.

அவனை வேனில் ஏற்றி விட, தாயுடன் சிறுமி பிரவீணாவும் சென்றார். மூங்கில்ஊரணி பஸ் நிறுத் தத்தில் அவர்கள் நின்று கொண்டிருந்தனர். பள்ளி வேன் வந்ததும், வசந்த பிரியன் அதில் ஏறினான்.

அப்போது சிறுமி பிரவீணா, வேன் படிக்கட்டு பகுதிக்கு சென்றார். இதனை டிரைவர் கவனிக்காமல் வேனை எடுக்க, பின் சக்கரத்தில் பிரவீணா சிக்கினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

பள்ளி வேனில் சிக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்து தொடர்பாக மனாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பஸ் மீது தாக்குதல்…!!
Next post திருப்பதி தனியார் ஆஸ்பத்திரியில் கல்லூரி மாணவி வெட்டிக் கொலை: போலீஸ் விசாரணை…!!