உரிமையாளரின் இரட்டை குழந்தை பிறந்தநாளில் 2 கன்றுகளை ஈன்ற பசு…!!
Read Time:1 Minute, 3 Second
ஆம்பூர் அடுத்த மாராப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கிருபா (வயது 35). விவசாயி. இவரது மனைவி ரோஸ்மா (30). இவர்களுக்கு கடந்த ஆண்டு ஆண், பெண் என இரட்டை குழந்தை பிறந்தது. ஆண் குழந்தைக்கு சாய் பிரீத்திவின் எனவும், பெண் குழந்தைக்கு சாய் பிரீத்திகா என்றும் பெயர் சூட்டியுள்ளனர்.
இரட்டை குழந்தைகளுக்கு இன்று பிறந்தாள் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், விவசாயி கிருபா வளர்த்து வந்த பசுமாடும் இரட்டை கன்றுகளை இன்று காலை ஈன்றது. அதுவும், 2 பாலின கன்றுகளை ஈன்றுள்ளது.
உரிமையாளரின் இரட்டை குழந்தைகளின் பிறந்தநாளில் அவரது பசுவும் 2 கன்றுகளை ஈன்றதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து பார்த்து செல்கின்றனர்.
Average Rating