துருக்கியில் சாலை விபத்து: 17 ஈரானியர்கள் சாவு
Read Time:45 Second
துருக்கியில் லாரி மீது பஸ் மோதி வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானதில் 17 ஈரானியர்கள் உயிரிழந்தனர். சிரியாவில் இருந்து துருக்கி நாட்டில் உள்ள கேல்டிரான் நகருக்கு சென்று கொண்டிருந்த ஈரான் நாட்டு பஸ், எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துள்ளானது. இதில், 14 ஈரானியர்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். மற்ற 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.