திருட்டு பயலே இரண்டாம் பாகத்திற்கு இசையமைக்கும் மெலடி கிங்..!!

Read Time:2 Minute, 11 Second

201611171412125984_melody-king-vidyasagar-music-in-thiruttu-payale-part-2_secvpfதிருட்டு பயலே இரண்டாம் பாகத்திற்கு மெலடி கிங் வித்யாசாகர் இசையமைக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்..

சுசிகணேசன் இயக்கத்தில் கடந்த 2006-ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றிநடை போட்ட படம் ‘திருட்டுப்பயலே’. ஜீவன், மாளவிகா, அப்பாஸ், சோனியா அகர்வால் நடித்திருந்த இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக இருக்கிறது. இரண்டாம் பாகத்தையும் சுசி கணேசனே இயக்கவிருக்கிறார்.

இரண்டாம் பாகத்தில் நடிக்க பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலாபால் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். ஏ.ஜி.எஸ்.நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி, 1990-2000 ஆம் ஆண்டுகளில் கோலிவுட்டில் மெலடி கிங்காக வலம்வந்த வித்யாசாகர்தான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இதுகுறித்து இயக்குனர் சுசிகணேசன் கூறும்போது, தற்போது கோலிவுட்டில் புதிய இளைஞர்கள் இசையமைப்பாளர்களாக உருவாகி வருகின்றனர். ஆனால், அவர்களிடம் நான் நினைக்கும் மெலடி இசை இல்லை. எனது திருட்டு பயலே படத்திற்கு மெலடி கிங் வித்யாசாகரின் இசை பொருத்தாக இருக்கும் என்பதால் அவரை தேர்வு செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் இருப்பதாகவும், அதில் மூன்று பாடல்கள் மெலடி பாடல்களாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஸ்ட்ரெச்சர் கொடுக்க மறுப்பு: கணவரை தரையில் இழுத்து சென்ற மனைவி…!!
Next post இறைச்சி சாப்பிடுபவர்களுக்கு அதிர்ச்சி செய்தி…!!