நடிகை சபர்ணா தற்கொலை தாங்க முடியவில்லை: நடிகையின் உருக்கமான பேச்சு….!! வீடியோ
பிரபல சின்னத்திரை மற்றும் திரைப்பட நடிகையான சபர்ணா அண்மையில் மர்மமான முறையில் அவருடைய வீட்டில் இறந்து கிடந்தார்.
அதன் பின்னர் மருத்துவர்கள் நடத்திய பிரேத பரிசோதனையில் அவர் தற்கொலை செய்து கொண்டது உறுதியானது. இவரின் மரணம் அவருடைய குடும்பத்தாருக்கு மட்டுமின்றி, திரையுலகத்தினர் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பிரபல சின்னத்திரை நடிகை மற்றும் தொகுப்பாளியுமான ரேகா பத்மநாபன் சபர்ணாவின் மரணம் குறித்து தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் உணர்ச்சி பூர்வமாக கருத்துக்களை பதிவேற்றம் செய்துள்ளார்.
அதில், சின்னத்திரை நடிகர்கள் சிலர் சபர்ணா போல் சில தவறான முடிவுகளை மேற்கொள்கின்றனர், இது தனக்கு மிகுந்த மனவருத்ததை ஏற்படுத்தியுள்ளதாகவும், சின்னத்திரையில் நடிக்கும் போது மட்டும் நடிகர், நடிகைகள் அவர்களை அம்மா, அப்பா மற்றும் உடன் பிறந்த சகோதரர்கள் போல் நடிக்கிறார்கள்.
அது முடிந்தவுடன் அவர்கள் அந்த வேஷத்தை கலைத்து விட்டு இருந்துவிடுகின்றனரோ என்பது போல் மனம் வருந்தி பேசியுள்ளார்.
மேலும் யாராக இருந்தாலும் எந்த ஒரு துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும் முதலில் தற்கொலை செய்வதற்கு முன்னர் தான் சொல்லுவதை சற்று முயற்சித்து பாருங்கள் என ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.
Average Rating