வெளிநாட்டு பெண் ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்தவர் கைது…!!

Read Time:2 Minute, 12 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90வெளிநாட்டு பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் காலி கோட்டை ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது நேற்று முன்தினம் இரவு நபர் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்த முயற்சித்துள்ளார்.

பெண் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்குள் பிரவேசித்த நபர், அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயற்சித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் ஹோட்டல் உரியைமாளரின் நண்பர் எனவும் தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதானவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

34 வயதான அவுஸ்திரேலிய பெண் கொழும்பில் உள்ள நண்பர் ஒருவருடன் ஹோட்டலில் இரண்டு அறைகளில் தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

யாரோ ஒருவர் இருட்டில் தமது ஆடைகளை களைவதனை உணர்ந்த பெண் கூச்சலிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து நண்பர், ஹோட்டல் பணியாளர்கள், முகாமையாளர் மற்றும் பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்த நபர் ஆகியோர் வந்து இதனை மேற்கொண்டவரை தேடியுள்ளனர்.

பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்த நபரே, இந்த குற்றச் செயலை மேற்கொண்டவரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

எனினும் மறுநாள் காலை சீ.சீ.ரீ.வி கமரா காட்சிகளை கண்காணித்த போது சந்தேக நபர் பிடிபட்டுள்ளார்.

சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இது தைரியமானவர்கள் மட்டும்!… செம்ம ஷாக்கான காட்சி…!! வீடியோ
Next post பற்களின் மீது அலுமினிய தகட்டினை ஒட்டுங்கள்: 1 மணி நேரத்தில் என்ன நடக்கும்?