துருக்கியில் நிலச்சரிவு: செப்பு சுரங்க விபத்தில் சிக்கி 3 பேர் பலி…!!
Read Time:1 Minute, 2 Second
துருக்கி நாட்டின் சிர்ட் மாகாணத்திற்குட்பட்ட சிர்வான் மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான செப்பு (copper) சுரங்கம் ஒன்றுள்ளது. இன்று, வழக்கம்போல் இந்த சுரங்கத்தில் செப்பு பாளங்களை தோண்டி எடுக்கும் பணி நடைபெற்று வந்தபோது, மேல்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் சுரங்கத்தின் ஒருபகுதி இடிந்து, மண்மேடாகிப் போனது.
இடிபாட்டில் சிக்கி உயிரிழந்த மூன்று பிரேதங்களை கண்டெடுத்துள்ள மீட்புக் குழுவினர், உள்ளே சிக்கிக் கிடக்கும் மேலும் 13 தொழிலாளர்களை உயிருடன் மீட்கும் நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
Average Rating