பாகிஸ்தானில் மழை, சூறாவளிக்கு 15 பேர் சாவு
Read Time:45 Second
பாகிஸ்தானில் துறைமுக நகரமான கராச்சியில் சூறாவளியுடன் கூடிய பலத்த மழைக்கு 15 பேர் பலியாயினர். வியாழக்கிழமை இரவு இச்சம்பவம் நடந்தது. சூறாவளியில் சிக்கி பல மின்கம்பங்கள் வேறுடன் சாய்ந்தன. சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் மக்கள், தங்கள் இருப்பிடங்களுக்குச் செல்ல முடியாமல் பல மணி நேரம் தவித்தனர். பல்வேறு இடங்களில் மின்சாரம் பாய்ந்து 14 பேர் இறந்தனர். வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.