உடல்கள் நிறம் மாறி பரிதாபமாக உயிரிழந்த மாணவி: மருத்துவரின் அலட்சியம்…!!
நீலகிரி மாவட்டத்தில் கல்லூரி மாணவி ஒருவருக்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குன்னூரை சேர்ந்த கவிதா(25) என்பவர் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் குன்னூரில் உள்ள முரளிதரன் என்ற மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுள்ளார்.
தவறான சிகிச்சையால் அவருக்கு தோல் அரிப்பு ஏற்பட்டதுடன், தலைமுடி உதிர துவங்கி, கண்பார்வையும் பாதிக்கப்பட்டது. உடலின் நிறமும் மாறிவிட்டது.
இதையடுத்து அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுதொடர்பாக, அவரது பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் குன்னூர் தாசில்தார் ஜான்மனோகரன் முன்னிலையில் கடந்த 3 வாரத்துக்கு முன் பேச்சுவார்த்தை நடந்தது.
இதில் மருத்துவர் முரளிதரன், மருத்துவ சங்க நிர்வாகி கவுதமன் மற்றும் அப்பெண்ணின் பெற்றோர் பங்கேற்றனர். அப்போது, மருத்துவசெலவில் குறிப்பிட்ட தொகையை ஏற்றுக் கொள்வதாக முரளிதரன் தெரிவித்தார்.
இந்தநிலையில், மருத்துவமனையில் கவிதா சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். மருத்துவரின் அலட்சியத்தால் சிகிச்சை பெற்று வந்த கவிதா இறந்து போனது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக மேல்குன்னூர் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating