வங்கிக்குள் திருடச்சென்று பயத்தில் தற்கொலை செய்துகொண்ட கொள்ளையன்…!!
Read Time:1 Minute, 13 Second
மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் சட்னா மாவட்டம், பேலா பகுதியில் உள்ள அலகாபாத் வங்கியின் பூட்டை உடைத்துகொண்டு நேற்றிரவு ஒரு கொள்ளையன் உள்ளே நுழைவதை கண்ட சிலர், இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
விரைந்துவந்த போலீசார் அந்த வங்கியை சுற்றிவளைத்தனர். கொள்ளையனை வெளியேவந்து சரணடையுமாறு போலீசார் எச்சரித்தனர். கைதானால் தன்னை ‘நைய்யப்புடைத்து’ விடுவார்கள் என்று பயந்த கொள்ளையன் அந்த வங்கிக்குள் கிடைந்த நீளமான துணியை எடுத்து, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்.
சிறிது நேரத்துக்கு பின்னர் கதவை உடைத்துகொண்டு வங்கிக்குள் நுழைந்த போலீசார் தர்மேந்திர பிரதான் என்ற அந்த கொள்ளையனின் பிரேதத்தை கைப்பற்றி, பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
Average Rating