இராணுவ வாகனத்தில் மோதுண்டு இளைஞன் பலி…!!

Read Time:1 Minute, 27 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-3திருகோணமலை, ரங்கிரிவுல்பொத்த சந்தியில் மோட்டார் சைக்கிளுடன் இராணுவத்துக்குச் சொந்தமான வாகனம், இன்று மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞனொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர், திருகோணமலை-துலசிபுரம் இலக்கம் 16 இல் வசித்து வரும் டபிள்யூ.சஜித் மதுசங்க எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தவருடன், இராணுவ வாகனம் மோதியதினாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக, ஆரம்ப கட்ட விசாரனைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

விபத்துக்குள்ளானவரை, கோமரங்கடவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, மேலதிக சிகிச்சைக்காகத் திருகோணமலை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளித்த போதும், சிகிச்சை பலனின்றி அவர், உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விபத்து தொடர்பாக, கோமரங்கடவெலப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வேலையில்லாப் பட்டதாரி 2: தனுஷிற்கு ஜோடியாகும் கவுதமி மகள்?
Next post உலகை அச்சுறுத்தும் வைரஸ்! அவசர கால நிலை பிரகடனப்படுத்த முடிவு…!!