காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை…!!
Read Time:1 Minute, 14 Second
காஷ்மீரில் 4 மாதங்கள் நீடித்த வன்முறை அடங்கி இயல்புநிலை திரும்புகிறது. அங்கும் மக்கள் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் தெற்கு புல்வாமா மாவட்டம் பேகம் பாக் கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு பாதுகாப்பு படையினர் விரைந்தனர். உடனே தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர்.
இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். இவன் பாகிஸ்தான் ஆதரவு ஹிஸ்புல் முஜா கிதீன் இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதி என தெரிய வந்தது.
அவன் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களும், வெடி மருந்துகளும் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடக்கிறது.
Average Rating