பிரித்தானியாவில் ஐபோன் வெடித்தமையினால் சிறுமிக்கு ஏற்பட்ட அவலம்…!!
பிரித்தானியாவில் தொலைபேசி அதிகமாக சூடாகியதன் காரணமாக வெடித்து விபத்துக்குள்ளாகி உள்ளது. இதனால் வீட்டின் ஒரு பகுதி எரிந்து நாசமாகயுள்ளது.
அப்பிள் நிறுவனத்தினால் தயாரிக்கப்படும் ஐபோன் தொலைபேசியே இவ்வாறு வெடித்துள்ளது.
குறித்த கையடக்க தொலைபேசியை 15 வயது சிறுமி ஒருவர் பயன்படுத்தியுள்ளார்.
எனினும் அவருக்கு எந்தவித பாதிப்பும் இன்றி தப்பி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
குறித்த தீ சம்பவம் இடம்பெற்ற போது இந்த சிறுமி அறையில் இருந்து வெளியே பாய்ந்து உயிரைக் காப்பாற்றியுள்ளார். எனினும் அறையில் இருந்த அனைத்து பொருட்களும் முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் இடம்பெற்ற போது குறித்த தொலைபேசி சார்ஜ் ஏற்றப்பட்டுள்ளதாகவும், இதன் பின்னர் தொலைபேசியின் பின் பக்கம் சூடாகி வெடித்துள்ளமையினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Average Rating