போலீஸ் ஹெலிகாப்டரை மர்மநபர்கள் சுட்டு வீழ்த்தினர்…!!
Read Time:1 Minute, 13 Second
பிரேசில் நாட்டின் ரியோடி ஜெனீரோ நகரில் குற்றவாளிகளை வேட்டையாட சென்ற போலீஸ் ஹெலிகாப்டரை மர்மநபர்கள் சுட்டு வீழ்த்தினர்.
பிரேசில் நாட்டில் போதை பொருள் கடத்தல் கும்பலுக்கும், ஆள் கடத்தல் கும்பலுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ரியோடி ஜெனீரோ அருகேயுள்ள பாவலா என்ற இடத்தில் ஒரு கும்பலை பிடிக்க போலீசார் ஹெலிகாப்டரில் பறந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. அதில் 4 போலீசார் உடல் கருகி பலியாகினர். இந்த ஹெலிகாப்டரை கடத்தல் கும்பல் சுட்டு வீழ்த்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது போன்ற சம்பவங்கள் பிரேசிலில் ஏற்கனவே நடந்துள்ளன.
Average Rating