முகத்தில் அரிப்புபொடி தூவி தொழிலாளியிடம் ரூ. 8 ஆயிரம் கொள்ளை..!!
Read Time:1 Minute, 9 Second
திருவொற்றியூர், ராஜாக்கடை தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி தொழிலாளி. இவர் தண்டையார்பேட்டை ஜி.ஏ. ரோட்டில் உள்ள வங்கியில் ரூ. 8 ஆயிரம் எடுத்துக் கொண்டு சைக்கிளில் சென்றார்.
சிறிது தூரம் சென்றபோது அவரது, முதுகு, முகத்தில் திடீரென அரிப்பு ஏற்பட்டது. அவர் அருகில் உள்ள கடையில் சைக்கிளை நிறுத்திவிட்டு முகத்தை கழுவினார்கள்.
திரும்பிவந்து பார்த்த போது சைக்கிளில் இருந்த ரூ. 8 ஆயிரத்துடன் பணப்பையை காணவில்லை. மர்ம நபர்கள் பின்தொடர்ந்து வந்து அரிப்பு பொடியை தூவி கொள்ளையில் ஈடுபட்டது தெரிந்தது.
இது குறித்து தண்டையார்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating