ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை கொல்ல முயற்சி: 2 வாலிபர்கள் கைது..!!

Read Time:1 Minute, 37 Second

201611201931280431_try-to-kill-the-woman-2-men-arrested-in-tuticorin_secvpfதூத்துக்குடி ஸ்பிக்நகர் அருகே உள்ள கக்கன்ஜி நகரை சேர்ந்தவர் சுடலைக்கண்ணு. இவரது மனைவி தங்கலட்சுமி (வயது 25). கூலி வேலை செய்து வந்த சுடலைக்கண்ணு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தங்கலட்சுமியை அடைய வேண்டும் என நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த தங்கமுருகன் (28), சாமிநகரை சேர்ந்த ஆனந்த் (28) ஆகிய இருவரும் திட்டமிட்டுள்ளனர். இதனால் அவர்கள் இருவரும் தங்கலட்சுமி வீட்டிற்கு அடிக்கடி சென்று தொந்தரவு கொடுத்துள்ளனர்.

சம்பவத்தன்று அங்கு சென்ற நண்பர்கள் இருவரும் தங்கலட்சுமியை ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தினர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர் கூச்சலிடவே தங்கமுருகனும், ஆனந்தும் அவரது வாயை பொத்தி, கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றனர். அவர்களிடம் இருந்து தங்கலெட்சுமி தப்பி ஓடினார்.

பின்னர் அவர் இது குறித்து முத்தையாபுரம் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் விசாரணை நடத்தி தங்கமுருகன், ஆனந்த் இருவரையும் கைது செய்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முகத்தில் அரிப்புபொடி தூவி தொழிலாளியிடம் ரூ. 8 ஆயிரம் கொள்ளை..!!
Next post டெல்லியில் ஓடும் ரெயிலில் பெண் கற்பழிப்பு: போலீசார் மடக்கி பிடித்தனர்..!!