மக்களே அவதானம்! இடி,மின்னல் தாக்கம் அதிகமாக இருக்கும்…!!
Read Time:1 Minute, 15 Second
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தின் காரணமாக நாடு பூராகவும் மழை வீழ்ச்சி அதிகரிக்கும். அத்துடன் இடி, மின்னல் தாக்கமும் அதிகமாக காணப்படும். ஆகவே மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
வங்காள விரிகுடாவின் தாழமுக்கம் தொடர்ந்தும் இலங்கையில் நிலைத்து நிற்கும் என்பதனால் வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மாகாணம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மழை வீழ்ச்சி அதிகரிக்கும்.
மேலும் இடி, மின்னல் கூடுதலான தாக்கத்தை செலுத்தும் என்பதனால் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும்.
எனவே நாடு பூராகவும் சீரற்ற காலநிலை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Average Rating