இளம் குடும்பஸ்தர் தூக்கிட்டு தற்கொலை…!!
Read Time:1 Minute, 3 Second
வாகரை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஓமடியாமடு எனும் இடத்தில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவமானது நேற்று(20) இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வாழைச்சேனை புதுக்குடியிருப்பை சேர்ந்த 28 வயதான சி.வசந்தகுகன் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
சடலம் வாழைச்சேனை வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு பிரேதப் பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Average Rating