நீரில் மூழ்கும் அபாயத்தில் மட்டக்களப்பு…!!

Read Time:1 Minute, 18 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90கடந்த சில நாட்களாக பெய்து வரும் அடை மழை காரணமாக மட்டு வாவியின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக மட்டக்களப்பு தனியார் பஸ் நிலையம், வாவியை அண்மித்துள்ள பல பாதைகள் மற்றும் சில கிராமங்களும் நீரில் மூழ்கி காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக தூர பயணம் செய்யும் பஸ் வண்டிகள் மற்றும் பிரயாணிகள் பெரும் அசௌகரியத்தை எதிர் நோக்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது .

இதேவேளை இன்று(22) ஆற்று நீரை கடலுக்குள் கொண்டு செல்வதற்கான ஆற்று வாய் வெட்டுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆற்று நீரை கடலுக்குள் செல்லுவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மட்டக்களப்பில் சில பகுதிகள் நீரில் மூழ்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொழுப்புச்சத்து இல்லாத காளான்: கண்டிப்பாக சாப்பிடுங்கள்….!!
Next post குழந்தையை பாதுகாப்பாக வளர்க்க இப்படி எல்லாம் பெற்றோர் செய்யலாமா?