3 வீரர்கள் படுகொலை: பாகிஸ்தான் நிலைகளின் மீது இந்தியப் படையினர் ஆவேச தாக்குதல்…!!

Read Time:1 Minute, 58 Second

201611231157398902_indian-army-launches-counteroffensive-after-soldier_secvpfஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள மச்சில் செக்டாரில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கோட்டுப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்கள் மீது அத்துமீறலாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் 3 இந்திய வீரர்கள் மரணம் அடைந்தனர். இதில் மன்தீப் சிங் என்ற வீரரின் தலையை துண்டித்து, அவரது உடல் சிதைக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் கைவரிசையாக இருக்கலாம் என்று கருதப்படும் நிலையில், இந்த கோழைத்தனமான தாக்குதலுக்கு இந்தியாவின் பதிலடி மிக கடுமையாக இருக்கும் என இந்திய ராணுவத்தின் வடக்கு பகுதி படைப்பிரிவு நேற்று எச்சரித்திருந்தது.

இந்நிலையில், எல்லைக்கோட்டுப் பகுதியில் உள்ள பாகிஸ்தான் நிலைகளின்மீது இந்திய வீரர்கள் இன்று காலையில் இருந்து கடுமையான தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாகிஸ்தான் ராணுவமும் பிம்பர் காலி, கிருஷ்ணா காட்டி மற்றும் நவ்ஷேரா பகுதியில் உள்ள இந்திய நிலைகள்மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கும் இந்திய வீரர்கள் தகுந்த முறையில் பதிலடி தந்து வருகின்றனர் என இந்திய ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் மணிஷ் மேத்தா குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பள்ளிக்குள் புகுந்து பஸ்சுக்கு தீ வைப்பு: மர்ம கும்பல் அட்டூழியம்..!!
Next post 3 வயது பிஞ்சை பாலியல் பலாத்காரம் செய்து சாக்கடைக்குள் வீசிய கொடூரன் கைது…!!