3 வயது பிஞ்சை பாலியல் பலாத்காரம் செய்து சாக்கடைக்குள் வீசிய கொடூரன் கைது…!!

Read Time:4 Minute, 4 Second

201611231122286895_delhi-3-year-old-survives-after-being-raped-strangled_secvpfசிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அதுபோன்ற கொடூர சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டுதான் உள்ளது. தலைநகர் டெல்லியில் பெண்கள், சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் சம்பவங்கள் அரங்கேறிய வண்ணம் உள்ளது.

இந்நிலையில், வடக்கு டெல்லியின் சராய் ரோகிலா பகுதியில் 3 வயது குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த திங்கள்கிழமை மாலை வீட்டிற்கு வெளியே விளையாடிய அந்த பெண் குழந்தையை, பீகாரை சேர்ந்த பால்பீர் என்பவன் சாக்லேட் கொடுத்து ஏமாற்றி தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது அந்தக் குழந்தையின் சகோதரி தெரிவித்த தகவலால் தெரியவந்தது.

அந்தக் குழந்தையின் சகோதரிக்கு 6 வயதாகிறது. அந்தச் சிறுமிக்கு மனநிலை சரியில்லை. இருப்பினும், தன்னுடைய சகோதரியை தூக்கி சென்றவன் குறித்து தொடர்ந்து 9 மணி நேரமாக தண்ணீர் கூட குடிக்காமல் சொல்லிவந்துள்ளார்.

ஆனால், மனநிலை சரியில்லாத அந்த சிறுமியின் பேச்சை அவளது பெற்றோர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

இந்நிலையில், இரவு 9 மணியாகியும் காணாமல்போன 3 வயது குழந்தை எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் அவளது பெற்றோர் காவல் நிலையத்துக்கு சென்றுள்ளனர்.

போலீசார் வந்து விசாரிக்கையில் சிறுமியை கடைசியாக பார்த்தது யார்? என்று கேள்வி எழுப்பி உள்ளனர். அப்போது மனநிலை பாதிக்கப்பட்ட சிறுமி தூக்கிச் சென்றவனின் பெயரை மீண்டும் கூறினாள்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அருகாமையில் வசிக்கும் பால்பீர் வீட்டிற்கு சென்றனர். குடித்துவிட்டு தூங்கிய பால்பீர் தான் குற்றம் எதுவும் செய்யவில்லை என்று மறுத்தான்.

சுமார் 5 மணிநேர தொடர் விசாரணைக்கு பின்னர், குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்து, சாக்கடையில் வீசிவிட்டதாக கூறினான். சம்பவ இடத்திற்கு அவனை போலீசார் அழைத்து சென்றனர், அவன் குழந்தையை அடித்து வீசிய சாக்கடையை அடையாளம் காட்டினான்.

ஆறடி ஆழமுள்ள அந்த சாக்கடைக்குள் இறங்கிய போலீசார் பிணத்தை வெளியே எடுக்க முயற்சித்தபோது அதிர்ஷ்டவசமாக அந்த குழந்தைக்கு உயிர் இருந்தது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் முதலுதவி அளிக்கப்பட்டு தற்போது அபாயகட்டத்தை கடந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இரவு முழுவதும் குளிரில் நடுங்கிய அந்தக் குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்ததாக தெரிவித்துள்ள போலீசார், பால்பீரை கைது செய்து, வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 3 வீரர்கள் படுகொலை: பாகிஸ்தான் நிலைகளின் மீது இந்தியப் படையினர் ஆவேச தாக்குதல்…!!
Next post இது பெண்ணா இல்லை பெண்ணை போன்றிருக்கும் பொம்மையா….? வீடியோ