எந்தவொரு தாய்க்கும் இது நடக்ககூடாது! நெஞ்சை பதற வைக்கும் உண்மை சம்பவம்…!!

Read Time:2 Minute, 49 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-4தமிழகத்தில் தன்னுடைய மகன் இறந்தது தெரியாமல் கையில் வைத்துக் கொண்டு இரண்டரை மணிநேரம் பயணித்துள்ளார் தாய் ஒருவர்.

சேலம் மாவட்டத்தை சேர்ந்த பெண் வனிதா, இவருடைய இரண்டரை வயது மகன் விஷ்ணு.

சென்னையில் சொந்தக்காரர் வீட்டுக்கு வந்த வனிதா, மகன் விஷ்ணுவுடன் கடந்த திங்கட்கிழமை மதியம் சேலத்துக்கு புறப்பட்டுள்ளார்.

சென்னை டூ சேலத்துக்கு பேருந்து கிடைக்காத காரணத்தினால் விழுப்புரம் சென்று மாறிப்போகலாம் என எண்ணியுள்ளார்.

இதன்படி விழுப்புரம் சென்ற வனிதா அங்கிருந்து சேலம் செல்லும் பேருந்தில் ஏறியுள்ளார்.

கூட்டம் அதிகமாக இருந்தது, இருக்கையை பிடிப்பதற்காக மக்களுக்குள் போட்டி. இதேசமயம் வேறொரு பேருந்துடன் குறித்த பேருந்து மோத சென்ற வேளை ஓட்டுநர் பிரேக் போட்டுள்ளார்.

இதில் வனிதாவின் கையிலிருந்த விஷ்ணு தவறி சாலையில் விழுந்தான்.

இதில் அவனது தலையில் உள்காயம் ஏற்பட்டுள்ளது, இதனை கவனிக்காத வனிதா, விடாமல் அழுது கொண்டிருந்த விஷ்ணுவை தூக்கி கொண்டு பேருந்தில் மீண்டும் ஏறியுள்ளார்.

ஒருவழியாக இருக்கையில் அமர நேரம் செல்ல செல்ல விஷ்ணுவின் இமைகள் மூடியது.

குழந்தை அயர்ந்து தூங்குவதாக நினைத்து வனிதாவும் சேலம் வந்துவிட்டார், விஷ்ணுவை எழுப்பியுள்ளார், அவன் எழுந்திருக்கவில்லை.

செய்வதறியாது திகைத்து போன வனிதா, விஷ்ணுவை தூக்கிக் கொண்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.

அங்கு அவனை சோதித்த மருத்துவர்கள் விஷ்ணு இரண்டரை மணிநேரத்துக்கு முன்பே இறந்தவிட்டதாக கூறியுள்ளனர்.

அதிர்ச்சியில் உறைந்து போனார் வனிதா, இதனையடுத்து விஷ்ணுவின் உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து வழக்குபதிவு செய்த பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகில் முதல் தலைமாற்று சத்திர சிகிச்சை! வரலாற்று சாதனை படைக்கும் மருத்துவர்கள்…!! வீடியோ
Next post கணவனை விட்டுவிட்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம்! நீதிபதி சொன்னது இதுதான்…!!