மருத்துவ மாணவர்களின் வெறிச்செயல்: வைரலாகும் வீடியோ..!!
வேலூரில் பெண் குரங்கு ஒன்றை மருத்துவ மாணவர்கள் கொடூரமாக துன்புறுத்தி கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் கடந்த 19ம் தேதி நண்பகலில் பெண் குரங்கு ஒன்று அங்கு தங்கியிருக்கும் மருத்துவ மாணவர்களின் அறைக்குள் நுழைந்துள்ளது.
அந்த குரங்கினை பிடித்து கட்டிப்போட்ட மாணவர்கள், அதனை பெல்ட்டால் அடித்து கொடூரமாக துன்புறுத்தி கொலை செய்துள்ளனர்.
அதன்பின்னர், இக்குரங்கின் உடலை சமையலறைக்கு பின்னால் குழிதோண்டி புதைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அக்கல்லூரியின் ஒரு சில மாணவர்கள், விலங்கின ஆர்வலர்களிடம் புகார் அளித்துள்ளனர்.
புகாரை அடுத்து மருத்துவக் கல்லூரிக்கு விரைந்து சென்ற விலங்குகள் நல ஆர்வலர்கள், காவல்துறைக்கு தகவல் கொடுத்து, பின்னர், குரங்கு புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி எடுத்து அதனை உடற்கூறு ஆய்வுக்கு உடபடுத்தியதாக கூறப்படுகிறது.
குரங்கினை புதைத்த இடத்தில் விலங்கின ஆர்வலர் தோண்டி எடுத்தபோது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றும் பேஸ்புக் உட்பட்ட சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவிவருகிறது.
Average Rating