இஸ்ரேலில் பாரிய தீ விபத்து ..! அணைக்க முடியாது போராடும் படை வீரர்கள்…!!
இஸ்ரேலில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பாரிய தீ விபத்தை இன்று வரையிலும் அணைக்க முடியாமல் தீயணைப்பு படை வீரர்கள் போராடி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தீ விபத்து ஏற்பட்டு சில மணி நேரங்களிலேயே சட்ட விரோத குடியேற்றப் பகுதிகள் உட்பட பல பிரதேசங்கள் தீக்கிரையாகியுள்ளன.
இதன் காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகள் பற்றி எரிந்துள்ளதுடன், 300 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமாக சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
26 ஹெலிகாப்டர்கள் ஊடாக 48 தீ அணைப்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள போதிலும் இதுவரையில் தீயை அணைக்க முடியாது போராடி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் கொடூர தீயை அணைக்க துருக்கி, இத்தாலி, சைப்ரஸ், கிரீஸ் உள்ளிட்ட பல உலக நாடுகளிடம் இஸ்ரேல் உதவி கோரியுள்ளது.
இதேவேளை, இஸ்ரேலினால் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள் ஆமோஸ் 6 வெடித்தமையே இந்த தீ விபத்துக்கான காரணம் என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating