இரண்டு குழந்தைகளின் தாய் 19 வயது மாணவனுடன் ஓட்டம்…!!
தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தில் இரு குழந்தைகளுக்கு தாயான 25 வயது பெண் 19 வயது மாணவனுடன் ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் பேட்டை செந்தமிழ் நகரை சேர்ந்தவர் கார்த்திக் (19), அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் சிவில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் கார்த்திக் கடந்த திங்கட்கிழமை கல்லூரி சென்று வீடு திரும்பவில்லை.
இதனால் பதற்றமடைந்த கார்த்திக் பெற்றோர் நண்பர்கள், உறவினர்கள் என அனைவரும் தேட ஆரம்பித்தனர்.
ஆனால், கார்த்திக் கிடைக்காததால் நெல்லை பேட்டை பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரைப் பெற்ற பொலிசார் மேற்கொண்ட விசாரணயில், பேட்டை, எம்.ஜி.டி நகரைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணுடன் அவர் சென்றுவிட்டார் என தெரியவந்துள்ளது.
இதில், அப்பெண்ணுக்கு ஏற்கனவே 3 பேருடன் திருமணம் நடந்து, சில காலம் மட்டும் வாழ்ந்து அடிக்கடி கணவனை மாற்றி வந்ததும், அப்பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளதும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் அப்பெண் கார்த்திக்கையும் தன் வலையில் சிக்க வைத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, பெண்ணின் வலையில் மயங்கிய கார்த்திக் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் அப்பெண் தன் இரு குழந்தைகளை அழைத்துக் கொண்டு கார்த்திக்கை இழுத்துக் கொண்டு ஓடி தலைமறைவாகியுள்ளார்.
இவர்கள் அடிக்கடி இருப்பிடத்தை மாற்றி வருவதால் அவர்களை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Average Rating