அம்மா எழுந்து வா! தாய் இறந்தது தெரியாமல் கண்ணீர் வடித்த குட்டி யானை…!!
Read Time:1 Minute, 15 Second
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் தாய் யானை இறந்தது தெரியாமல் குட்டி யானை பரிதவித்த சம்பவம் நடந்துள்ளது.
அசாம் மாநிலத்தின் சோனித்பூரிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது, காட்டு யானை ஒன்று அதன் குட்டியுடன் காட்டை விட்டு வந்துள்ளது.
அப்போது எதிர்பாராதவிதமாக பத்து அடி பள்ளத்தில் விழுந்தது, இதில் காலில் முறிவு ஏற்பட்டதால் எழுந்து வர முடியவில்லை.
சுமார் அரை மணி நேரம் உயிருக்கு போராடிய யானை இறந்து போனது, அதனுடன் வந்த குட்டி யானை தாய் இறந்தது தெரியாமல் அங்கும் இங்கும் சுற்றி வந்தது.
தகவலறிந்து விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் குட்டி யானையை மீட்டனர், உணவுக்காக நகருக்குள் அதிகளவு யானைகள் வருவதால் மக்கள் குழிதோண்டி வைத்துள்ளனர்.
இதுவரையிலும் 50க்கும் மேற்பட்ட யானைகள் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Average Rating