தாய், தந்தையை வெட்டிக் கொன்ற சந்தானம்! அதிர வைக்கும் பின்னணி காரணம்…!!
Read Time:1 Minute, 11 Second
தமிழகத்தில் மகன் ஒருவன் தனது தாய், தந்தையை வெட்டி கொன்ற சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை பகுதியிலே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது.
அப்பகுதியில், ஓய்வு பெற்ற தாசில்தார் மகாலிங்கம் தன் மனைவி சுசிலா, மகன் சந்தானுத்துடன் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில், மகாலிங்கம் சுசிலா இருவரும் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளனர். தகவல் அறிந்த சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், மகன் சந்தானம் தான் சொத்துத் தகராறு காரணமாக இருவரையும் வெட்டிக் கொன்றதாக தெரியவந்துள்ளது. சம்பவத்தை தொடர்ந்து தலைமறைவாகியுள்ள சந்தானத்தை பொலிசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
Average Rating