மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: ஒருவர் பலி…!!
Read Time:53 Second
அஹுன்கல பகுதியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பஸ், மோட்டார் வாகனம் மற்றும் முச்சக்கர வண்டி ஆகியன ஒன்றுடன் ஒன்று மோதியமையினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்றிரவு இடம் பெற்றுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துடன் தொடர்புடைய பஸ் சாரதியை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Average Rating